கந்தர்வகோட்டையில் காற்றுடன் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

 

கந்தர்வகோட்டை, ஜூலை 4: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காற்றுடன் கனமழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின்றி கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று மாலையில் காற்றுடன் கனமழை பெய்தது. கந்தர்வகோட்டை, காட்டுநாவல், வளவம்பட்டி, அக்கச்சிப்பட்டி, மோகனூர், மட்டங்கால், சுந்தம்பட்டி, சோத்து பாளை, வடுகப்பட்டி, கோமாபுரம், வாண்டையான்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது. சுட்டெரிக்கும் வெயில் வாடிவந்த மக்களுக்கு குளிர் காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post கந்தர்வகோட்டையில் காற்றுடன் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: