இவ்விழாவில் வில்லியனூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ேதரை வடம் பிடித்து கோவிந்தா! கோவிந்தா!! என்று கோஷமிட்டு இழுத்து சென்றனர். தேரானது கோயிலில் இருந்து புறப்பட்டு நான்குமாட வீதிகள் வழியாக சென்று 11 மணியளவில் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. திருவிழாவை முன்னிட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள், ெதாழிலதிபர்கள் உள்ளிட்டோர் ஆங்காங்கே அன்னதானம் வழங்கினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் சிறப்பு அலுவலர் ராமதாஸ் மற்றும் கோயில் நிர்வாகிகள் பொதுமக்கள் செய்திருந்தனர். மேலாண்டை வீதி வழியாக வரும்போது அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதால், ஒன்றரை நிமிடம் தேர் நின்று புறப்பட்டு சென்றது.
The post வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.