சாலையில் குப்பையை வீசிய பெண்: தூய்மை பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

கோவை: கோவை மாவட்டம் சாய்பாபா காலனி கே.கே புதூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் சாலையில் குப்பையை வீசினார் இதனை அருகில் இருந்த தூய்மை பணியாளர் கேட்டதும் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

கோவை மாநகராட்சியில் நாள்தோறும் மாநகராட்சி ஊழியர்கள் குப்பையை சேகரித்து செல்கின்றனர். இந்நிலையில் கே.கே புதூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் குப்பையை சாலையில் வீசி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கேள்வி எழுப்பிய தூய்மை பணியாளரிடம் கேள்வி எழுப்பிய தூய்மை பணியாளரிடம் அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

The post சாலையில் குப்பையை வீசிய பெண்: தூய்மை பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: