செல்லாண்டியம்மன் கோயில் தேரோட்டம்

மல்லசமுத்திரம், ஜூன் 25: மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற செல்லாண்டியம்மன் கோயில் தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மல்லசமுத்திரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சோழீஸ்வரர் அழகுராய பெருமாள், செல்லாண்டியம்மன் கோயில்களில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்தது. இதுதொடர்பாக கோட்டாட்சியர் கவுசல்யா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் திருவிழாவை சுமூகமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கோயில் விழா துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான செல்லாண்டியம்மன் கோயில் தேரோட்டம், நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். மேலும் பொங்கல் வைத்தல், அம்மன்அழைப்பு, மாவிளக்கு ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அழகுராய பெருமாள் கோயிலில் கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது.

The post செல்லாண்டியம்மன் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: