மனைவி மூலம் வீட்டுக்கு வரவழைத்து 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி நிர்வாண படம் எடுத்த வாலிபர்: போக்சோவில் தம்பதி கைது

அரூர் : அரூரில் நட்பாக பழகி 15 வயது சிறுமியை நிர்வாண படம் எடுத்து நகை பறித்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளிக்கு செல்லும் போது அரூரைச் சேர்ந்த தெய்வானை(20) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்தாண்டு மே 7ம்தேதி சிறுமியை கடைக்கு போகலாம் என கூறிய தெய்வானை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை தெய்வானையின் கணவர் தமிழ்செல்வன் (27) மிரட்டி நிர்வாணமாக்கி செல்போனில் படம் எடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து சிறுமியை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஒருவாரம் கழித்து சிறுமியை தொடர்பு கொண்ட தமிழ்ச்செல்வன் பணம் தராவிட்டால் நிர்வாண போட்டோக்களை யூடியூப்பில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். பயந்து போன சிறுமி தன்னிடம் பணம் இல்லை என கூறி அழுதுள்ளார். அதற்கு வீட்டில் உள்ள நகையை கொடு என தமிழ்ச்செல்வன் கேட்டுள்ளார்.வேறு வழியின்றி பெற்றோருக்குத் தெரியாமல் ஐந்தரை பவுன் நகையை எடுத்துவந்து தமிழ்ச்செல்வனிடம் கொடுத்துள்ளார். இதுதெரிந்து சிறுமியின் பெற்ேறார் அரூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி தமிழ்செல்வன் தெய்வானை ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.

The post மனைவி மூலம் வீட்டுக்கு வரவழைத்து 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி நிர்வாண படம் எடுத்த வாலிபர்: போக்சோவில் தம்பதி கைது appeared first on Dinakaran.

Related Stories: