சிதம்பரம் கோயிலில் சாமி கும்பிட வந்த முதியவரை தாக்கிய 2 தீட்சிதர்கள்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி சாலை தெருவை சேர்ந்தவர் கார்வண்ணன் (61). இவர் நேற்று முன்தினம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள 21 படி அருகே நின்று கொண்டு சுவாமி ஊர்வலம் வந்தபோது சுவாமியை தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கனகசபாபதி, ஸ்ரீ வர்ஷன் தீட்சிதர்கள் இருவரும் அங்கு நின்ற கொண்டிருந்த கார்வண்ணனை தள்ளி போ… என்று தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கார்வண்ணனை தீட்சிதர்கள் இருவரும் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார், கனகசபாபதி, ஸ்ரீ வர்ஷன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிதம்பரம் கோயிலில் சாமி கும்பிட வந்த முதியவரை தாக்கிய 2 தீட்சிதர்கள் appeared first on Dinakaran.

Related Stories: