செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட சிறப்பு கிராம சபை கூட்டம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. நரிமணம் ஊராட்சியில் மன்ற தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். துணை தலைவர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சீனிவாசன் பேசினார். கிராம சபா கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவீனம், 2022-23ம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள், கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு அறிக்கை, மறு-கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) நம்ம ஊரு சூப்பரு சிறப்பு பிரசாரம்,தனிநபர் சுகாதாரம்,ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், ஜல்ஜீவன் திட்டம் – விடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி தீர்மானம், சமுதாயம் சார்ந்த அமைப்புகள் மகளிர் சுயஉதவி குழுக்கள்,கிராம ஊராட்சிகளில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு, குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான நடவடிக்கை, சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. ஊராட்சி செயலர் மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதேபோல் அனைத்து கிராம அண்ணா மறுமணச் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட எரவாஞ்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினி தேவி பாலதண்டாயுதம் தலைமையிலும், அகரகொந்தகையில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி பக்கிரிசாமி தலைமையிலும்,கொட்டாரக்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜீவ் காந்தி தலைமையிலும்,ஏனங்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் ஹாஜா நிஜாமுதீன் தலைமையிலும்,வடகரை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமையிலும்,பில்லாளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேவி சகாயராஜ் தலைமையிலும்,ராராந்திமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவி தலைமையிலும் சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றது.

The post செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட சிறப்பு கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: