சாக்கோட்டை செயின்ட் சேவியர் செவிலியர் பள்ளி, கல்லூரியில் உறுதி மொழி ஏற்பு விழா

கும்பகோணம்: சாக்கோட்டை செயின்ட் சேவியர் செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரியில் உறுதி மொழி ஏற்பு விழா நடைபெற்றது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா சாக்கோட்டையில் அமைந்துள்ள மாதா கல்வி நிறுவனங்களின் கீழ் இயங்கிவரும் செயின்ட் சேவியர் செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரியில் உறதிமொழி எற்பு (லேம்ப் லைட்டிங்) விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது, கல்லூரி தாளாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் மரியசெல்வம் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரி துணை பேராசிரியர் மதுபாலா வரவேற்றார். விழாவில் முதன்மை விருந்தினராக கும்பகோணம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை குழந்தைகள் மருத்துவரும், மூத்த அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பிருந்தா மற்றும் சிறப்பு விருந்தினராக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சமூகவியல் மற்றும் சமூக பணித்துறை பேராசிரியர் டாக்டர் விநாயகமூர்த்தி மற்றும் கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, செவிலியர் கண்காணிப்பாளர் திருமதி ஜானகி ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் செவிலிய மாணவிகளுக்கு, செவிலிய சேவைகளின் சிறப்பை பற்றியும் வாழ்க்கையில் வெற்றி அடைவதுபற்றியும் அவர்கள் ஊக்க உரையாற்றினர்.

The post சாக்கோட்டை செயின்ட் சேவியர் செவிலியர் பள்ளி, கல்லூரியில் உறுதி மொழி ஏற்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: