பைக், ஆட்டோ மோதி சிறுவன் பலி

பேராவூரணி : சேதுபாவாசத்திரம் அருகே ஆட்டோ, மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் சிறுவன் பலியானான். சேதுபாவாசத்திரம் அருகே துறையூர் கிராமத்தை சேர்ந்த முத்துராமன் மகன் அருள்முருகன்(16). இவர் நேற்று மாலை துறையூரிலிருந்து வீட்டுக்கு சாமான்கள் வாங்குவதற்காக சேதுபாவாசத்திரம் கடைவீதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். எதிரே சேதுபாவாசத்திரத்தை சேர்ந்த நைனாமுகமது என்பவர் பேராவூரணி நோக்கி ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளும், ஆட்டோவும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அருள்முருகன் பலத்த காயமடைந்தார். பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அருள்முருகன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிளஸ்1 வகுப்பில் சேர்வதற்காக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post பைக், ஆட்டோ மோதி சிறுவன் பலி appeared first on Dinakaran.

Related Stories: