போவோமா… புல்டோசர் ஊர்வலம்: உ.பி முதல்வரால் ஈர்க்கப்பட்ட மணமகன்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த கிருஷ்ணா மஹ்தோ என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. மணமக்கள் ஊர்வலத்தின் போது, அவர்கள் பாரம்பரிய முறையில் வாகனத்தில் ஊர்வலம் செல்லவில்லை. மாறாக புல்டோசர் வாகனத்தில் அமர்ந்து கொண்டு, ஒய்யாரமாக ஊர்வலம் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மணமேடை அலங்கரிப்பாளரான மணமகன் கிருஷ்ணா மஹ்தோ, தனது திருமண ஊர்வலத்தை வித்தியாசமாக செய்து காட்ட வேண்டும் என்பதற்காக, தனது இல்லத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் மணமகள் வீட்டிற்கு அலங்கரிக்கப்பட்ட புல்டோசர் வாகனத்தில் ஜோடியாக சென்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், புல்டோசர் நீதியின் மூலம் சமூக விரோத சக்திகளை ஒடுக்கி வருகிறார். அதனால் அவர் மீது எனக்கு ஈர்ப்பு உள்ளது. எனது திருமணத்தை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதற்காக, புல்டோசரில் மணமகளுடன் ஊர்வலம் சென்றேன்’ என்று கூறினார். இவரது வித்தியாசமான முயற்சியை சிலர் பாராட்டியும், விமர்சித்தும் பதிவிட்டுள்ளனர்.

The post போவோமா… புல்டோசர் ஊர்வலம்: உ.பி முதல்வரால் ஈர்க்கப்பட்ட மணமகன் appeared first on Dinakaran.

Related Stories: