கனடாவில் பேருந்தும் டிரக்கும் மோதியதில் 15 பேர் நிகழ்விடத்திலேயே பலி..

கனடாவில் முதியவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் டிரக்கும் மோதியதில் 15 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். கனடாவில் உள்ள மனிடோபா மாகாணத்தில் 25 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கார்பெரி பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக பேருந்து மீது டிரக் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பேர் பலியாகினர். இவர்கள் அனைவரும் முதியவர்கள் ஆவர். மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post கனடாவில் பேருந்தும் டிரக்கும் மோதியதில் 15 பேர் நிகழ்விடத்திலேயே பலி.. appeared first on Dinakaran.

Related Stories: