2வது பாதியில் கோல் அடிக்க இரு அணிகளும் கடுமையாக போராடின. ஆனால் கடைசி வரை கோல் எதுவும் அடிக்கபடவில்லை. இதனால் கோல்கள் இன்றி 0-0 என போட்டி சமனில் முடிந்தது. முன்னதாக நடந்த மற்றொரு போட்டியில் வனுவாடு 1-0என மங்கோலியாவை வீழ்த்தியது. லீக்சுற்று முடிவில் இந்தியா 2வெற்றி, ஒரு டிரா என 7 புள்ளி, லெபனான் ஒரு வெற்றி, 2 டிரா என 5 புள்ளியுடன் முதல் 2இடங்களை பிடித்து பைனலுக்கு முன்னேறியது. நாளை மறுநாள் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பைனலில் இந்தியா-லெபனான் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
The post இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து: பைனலில் லெபனானுடன் 18ம் தேதி இந்தியா மோதல் appeared first on Dinakaran.