போதைப்பொருள் விற்ற இருவர் கைது

 

பாலக்காடு,ஜூன்16: திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி சாலையில் ஹெராயின் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடிப்படையாகக்கொண்டு திருச்சூர் டி.எஸ்.பி., சந்தோஷ் தலைமையில் சிறப்புப்படையினர் சாலக்குடி அதிரப்பள்ளி சாலையில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அதிரப்பிள்ளி சாலையில் பரியாரம் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் ஹெராயின் போதைப்பொருள் விற்பனை செய்வதை கையும் களவுமாக பிடித்தனர்.

இவர்களிடம் இருந்து 28 சிறுபாட்டில்களில் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டனர். விசாரணையில் அசாம் மாநிலம் நாகோண் மாவட்டம் தூபாகுரிகாவோண் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (22), நூருல் அமீன் (35) என தெரிய வந்தது. சுற்றுலா பயணிகளுக்கும், மாணவ,மாணவிகளுக்கும் போதை பொருள் சப்ளை செய்து வந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

The post போதைப்பொருள் விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: