இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்தார். இதில் விசாரணை நடத்தி, கடந்த 6ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. 6ம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணைக்காக பட்டியலில் வரவில்லை. எந்நேரமும் வழக்கு விசாரணைக்கு வரலாம் என போலீசார் தயாராக உள்ளனர். இதற்கிடையில் இதுதொடர்பாக பல்வேறு அரசு துறைகளில் பெரும்பாலான ஆவணங்களை போலீசார் வாங்கிவிட்டனர். இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை ஏதும் விதிக்காத நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவது தொடர்பாக போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
The post வேட்புமனு தாக்கலில் தவறான தகவல் எடப்பாடிக்கு சம்மன் அனுப்ப சேலம் போலீசார் ஆலோசனை appeared first on Dinakaran.