கீழ்வேளூரில் பொதுவிநியோக திட்ட குறைதீர் முகாம்

 

கீழ்வேளூர்,ஜூன் 11: நாகப்பட்டினம் மாவட்டத்தில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், பொது விநியோகத் திட்ட மக்கள் தொடர்பு முகாம் ஜூன் 10ம் தேதி தாலுகா அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, கீழ்வேளூர் தாலுகா இருக்கை, ஊராட்சியில் பொது விநியோகத் திட்ட மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கீழ்வேளூர் வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், ரேஷன் கார்டில் செல்போன் எண் மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கார்டு வகை மாற்றம் உள்பட பொது மக்களிடம் இருந்து 20 மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் கிராம நிர்வாக அலுவலர் பீர் முஹம்மது, ஊராட்சி தலைவர் முருகானந்தம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கீழ்வேளூரில் பொதுவிநியோக திட்ட குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: