நாசரேத் அருகே காரில் புகையிலை கடத்தியவர் கைது

 

நாசரேத், ஜூன் 11: நாசரேத் அருகே காரில் புகையிலை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். நாசரேத் அருகே உள்ள அகப்பைக்குளத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நாசரேத் எஸ்.ஐ. எபநேசர் தலைமையில் போலீசார், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு நிறுத்தியிருந்த காரை சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.

இதில் காரின் டிக்கியில் 110 புகையிலை பாக்கெட்டுகள், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 110 புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றிய போலீசார், காரின் உரிமையாளரான அகப்பைகுளம் 1வது தெருவைச்சேர்ந்த செல்வன் விக்டர்(58) என்பவரை கைது செய்த காரையும் பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாசரேத் அருகே காரில் புகையிலை கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: