டூவீலர் மீது கார் மோதி முதியவர் பலி

 

தேனி, ஜூன் 11: தேனி அருகே, முத்துத்தேவன்பட்டியில் உள்ள காலனியைச் சேர்ந்தவர் ராஜா (59). இவர், நேற்று காலை வீரபாண்டியில் இருந்து டூவீலரில் முத்துத்தேவன்பட்டிக்கு வந்தார். தேசிய நெடுஞ்சாலை ஆணைய பைபாஸ் ரோட்டில் வந்தபோது, முத்துத்தேவன்பட்டி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு பிரபல தனியார் ஆங்கிலப்பள்ளி அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, இவருக்கு பின்னால் அதிக வேகத்தில் வந்த கார் இவரது டூவீலர் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ராஜா, தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உயிரிழந்த ராஜாவின் மனைவி குருபாக்கியம் அளித்த புகாரின்பேரில், வீரபாண்டி போலீசார் விபத்துக்கு காரணமான தருமபுரி மாவட்டம், கேத்தநள்ளியை சேர்ந்த ஜெகநாதன் (61) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் மீது கார் மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: