ஆலங்குடி அருகே மயங்கி விழுந்த வாலிபர் சாவு

 

ஆலங்குடி, ஜூன்10: கோயம்புத்தூர் மாவட்டம், காமாட்சிபுரம் முத்துசாமி செட்டியார் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் தினேஷ் குமார் (29). இவர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்காடு தெற்கில் உள்ள தனது நண்பர் விஜய் என்பவர் வீட்டிற்கு மாரியம்மன் கோயில் திருவிழாவிற்காக வந்துள்ளார். அப்போது, வீட்டில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட விஜயின் குடும்பத்தினர், தினேஷ்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஆலங்குடி அருகே மயங்கி விழுந்த வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: