திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்

சிவகங்கை, ஜூன் 9: மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலுக்கு நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் கூறியுள்ளதாவது: சிவகங்கை மாவட்ட திட்டமிடும் குழு(பிளானிங் கமிட்டி) உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 23ல் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் உள்ள 16 உறுப்பினர்கள் 4 நகராட்சிகளில் உள்ள 117வார்டு உறுப்பினர்கள் 11பேரூராட்சி வார்டுகளில் உள்ள 167உறுப்பினர்கள் சேர்த்து மொத்தமுள்ள 300 உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் மாவட்ட ஊராட்சியில் இருந்து 9 உறுப்பினர்களையும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இருந்து 3உறுப்பினர்களும் சேர்த்து 12பேர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய 10ம் தேதி கடைசி நாள். 12ம் தேதி வேட்பு மனுக்கள் சரிபார்க்கப்படும். திரும்ப பெற 14ம் தேதி கடைசி நாள் ஆகும். 23ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பிற்பகல் 3மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும். வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கான முதல் கூட்டம் 28ம் தேதி நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். முதல் நாளான நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

The post திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: