80 வயதிலும் அடங்காத ஆசை உடலுறவுக்கு மறுத்த மூதாட்டி கழுத்தை இறுக்கி கொன்ற காமுகக்கணவர் கைது

விழுப்புரம், ஜூன் 8: விழுப்புரம் அருகே உடலுறவுக்கு மறுத்த மூதாட்டியை கழுத்தை இறுக்கி கொலை செய்த காமுக கணவனை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே காவணிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி(80). இவரது மனைவி விருதாம்பாள்(70). இவர்களுக்கு அய்யனார், ஆனந்த், ஆறுமுகம், சங்கர் என்ற மகன்களும், சிவகாமி, சுதா என 6 பிள்ளைகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்துவருகின்றனர். கலியமூர்த்தி, விருதாம்பாள் மட்டும் காவணிப்பாக்கத்திலுள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொத்தனார் வேலை செய்துவரும் கலியமூர்த்தி கடந்த ஓராண்டுக்கு முன்பு சைக்கிளில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கீழேவிழுந்ததில் தலையில் அடிபட்டது. அதிலிருந்து கலியமூர்த்தி சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் அவ்வப்போது சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைகாக சென்று வந்தார். இந்நிலையில் கலியமூர்த்தி, அவ்வப்போது மனைவியை ஆசைக்கு இனங்குமாறு கூறுவதும் அவர் மறுத்துசென்றதால் அடிக்கடி இருவருக்குமிடையே தகராறு ஏற்படுமாம். கடந்த வாரம் விருதாம்பாளை ஆசைக்கு அழைத்து அவர் மறுத்து சண்டை போட்டுவிட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு நடந்த விவரத்தை கூறியுள்ளார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த மனைவியை அன்றிரவு மீண்டும் கலியமூர்த்தி, அழைத்துள்ளார். அவர் மறுத்ததால் கயிறால் மனைவியை அடித்தாகவும், கழுத்தை இறுக்கியதில் விருதாம்பாள் உயிரிழந்துள்ளார். நேற்று காலை அவர் எழுந்திருக்காத நிலையில் அக்கம் பக்கத்தினர் கலியமூர்த்தியிடம் கேட்டபோது எதுவும் பேசாமல் மவுனமாக இருந்துள்ளார். விருதாம்பாளை, எழுப்பியபோதுதான் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த தாலுகா போலீசார், சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கலியமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது மனநலம் பாதிக்கப்பட்டதைபோல் பேசாமலிருந்தார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் நந்தகுமார் அளித்த புகாரின்பேரில் கலியமூர்த்திமீது 304(11) பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட கலியமூர்த்தி உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பதனை சோதனை செய்வதற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 நாட்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டவர் உறுதியானால் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும், மனநலம் சரியாக இருந்தால் சிறையில் அடைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தள்ளாடும் 80 வயதில் அடங்காத ஆசையால் மனைவியை கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post 80 வயதிலும் அடங்காத ஆசை உடலுறவுக்கு மறுத்த மூதாட்டி கழுத்தை இறுக்கி கொன்ற காமுகக்கணவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: