மதவாத எதிர்ப்பு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்: பரூக் அப்துல்லா விருப்பம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, நேற்று காலை பெங்களூருவில் உள்ள முதல்வரின் அரசு இல்லமான கிருஷ்ணாவில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடாவின் வீட்டிற்கு பரூக் அப்துல்லா சென்றார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பரூக் அப்துல்லா கூறும்போது, மதவாத சக்திகளை ஒழிக்க வேண்டுமானால், அடுத்தாண்டு நடக்கும் மக்களவை தேர்தலில் மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். மாநில கட்சிகள் மதவாத எதிர்ப்பு அணியில் இணைய வேண்டும்’ என்றார்.

The post மதவாத எதிர்ப்பு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்: பரூக் அப்துல்லா விருப்பம் appeared first on Dinakaran.

Related Stories: