உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு எனது குப்பை எனது பொறுப்பு உறுதிமொழி ஏற்பு

 

திருவாரூர், ஜூன் 7: உலக சுற்றுசூழல் தினத்தைமுன்னிட்டு, திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் எனது குப்பை எனது பொறுப்பு உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ எடுத்துக்கொண்டார். அதில் குப்பையில்லா நகரங்களை உருவாக்குவோம், எனது குப்பை எனது பொறுப்பு, சுற்றுபுற தூய்மையே சுகாதாரத்தின் மேன்மை, நெகிழி பைகளின் பயன்பாட்டை தடுக்கும் விதமாக மஞ்சள் பைகளை பயன்படுத்துவது, சுற்றுபுற சூழலை பாதுகாத்திட மரங்களை நட்டு வளர்ப்பது போன்ற உறுதிமொழியினை கலெக்டர் சாருஸ்ரீ எடுத்துக்கொண்டார். நிகழ்ச்சியில் திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியாசெந்தில், நகராட்சி கமிஷ்னர் பிரபாகரன், பொறியாளர் அய்யப்பன், மேலாளர் முத்துகுமார், நகராட்சி நியமனகுழு உறுப்பினர் பிரகாஷ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

The post உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு எனது குப்பை எனது பொறுப்பு உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: