கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை

 

திருமயம்,ஜூன்7: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராசப்பன் (38). இவரது மகள் திவ்யா (14). புதுக்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என திவ்யா வீட்டில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் திவ்யாவை கண்டித்துள்ளனர்.

இதில் விரக்தி அடைந்த திவ்யா அவரது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திவ்யாவின் தந்தை பனையப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவி திவ்யா உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: