ஆலங்குடி அருகே 120 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

 

ஆலங்குடி, ஜூன்7: ஆலங்குடி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனை செய்வதாக புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கலிபுல்லா நகரில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த, அறந்தாங்கி எல்.என்.புரம் 4ம் வீதியைச் சேர்ந்த சதாம் உசேன் (48), கல்லாலங்குடி பாரதி நகரைச் சேர்ந்த சம்சுதீன் (40) ஆகியோரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 கிலோ குட்கா பொருட்கள், 2 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர்.

The post ஆலங்குடி அருகே 120 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: