வடமதுரை அருகே ஸ்டூடியோவை உடைத்து 8 பவுன், ரூ.70 ஆயிரம் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை

 

வடமதுரை, ஜூன் 7: வடமதுரை அருகே ஸ்டுடியோவை உடைத்து 8 பவுன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வடமதுரை அருகேயுள்ள தென்னம்பட்டியை சேர்ந்தவர் மோகனப்பிரியா (39). இவர் அப்பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பின், கடையை மூடிவிட்டு மோகனப்பிரியா வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடைக்கு வந்த போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது, கல்லா உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் உடனே வடமதுரை போலீசிற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் எஸ்ஐ அங்கமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரிக்கப்பட்டன. திண்டுக்கல்லில் இருந்து மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. இதுகுறித்து ேபாலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஸ்டூடியோவை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இப்குதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வடமதுரை அருகே ஸ்டூடியோவை உடைத்து 8 பவுன், ரூ.70 ஆயிரம் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: