பாம்பு கடித்து பெண் பலி

 

விருதுநகர், ஜூன் 6: விருதுநகர் அருகே பணியின் போது பாம்பு கடித்ததில் நூறு நாள் வேலை திட்ட பெண் பணியாளர் பலியானார். விருதுநகர் அருகே சின்ன பேராலியைச் சேர்ந்தவர் இந்திராணி (55). இவர் நூறு நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வந்தார். கடந்த 31ம் தேதி வழக்கம் போல் நூறு நாள் வேலை திட்ட பணிக்கு சென்றார். கருப்பசாமி கோயில் அருகில் உள்ள ஓடையில் புதரை சுத்தம் செய்யும் பணியில் சக பணியாளர்களுடன் ஈடுபட்டிருந்தார்.

அப்போது இடது காலில் பாம்பு கடித்துள்ளது. மயங்கிய அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இந்திராணி இறந்தார். இது தொடர்பாக ரூரல் போலீசில் இந்திராணியின் மகன் முத்துமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பாம்பு கடித்து பெண் பலி appeared first on Dinakaran.

Related Stories: