சூறைக்காற்றால் ரோட்டில் விழுந்த மரங்கள் அகற்றம்

 

மானாமதுரை, ஜூன் 6: மானாமதுரையில் நேற்று முன்தினம் மாலை திடீரென மழை பெய்தது. மழை துவங்கிய சிறிது நேரத்தில் பலத்த சூறைக்காற்று வீசத்துவங்கியது. இதில் சிப்காட் ரயில்வே கேட் அருகில் இருந்து உடைகுளம் பஸ் ஸ்டாப் வரை இருந்த ரோட்டில் இருபுறமும் இருந்த மரங்கள் முறிந்து ரோட்டில் பலத்த சப்தத்துடன் விழுந்தன.

உடைகுளத்தில் மின் கம்பத்தில் மரம் விழுந்து மின்கம்பம் இரண்டு துண்டாக விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்து அங்கு வந்த மின்வாரியத்தினர் மின்தடை ஏற்படுத்தி விபத்து நேராத வகையில் தடுத்தனர். நேற்று காலை ரோட்டில் விழுந்த மரங்கள், கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது. உடைந்த மின்கம்பமும் சீரமைக்கப்பட்டது. ரோட்டில் மரங்கள் விழுந்ததால் நேற்று முன்தினம் இரவு 4 மணிநேரம் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

The post சூறைக்காற்றால் ரோட்டில் விழுந்த மரங்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: