போராட்டம் நடத்திய நகராட்சி பொறியாளர் சஸ்பெண்ட்

காரைக்குடி, ஜூன் 6: காரைக்குடியில் போராட்டம் நடத்திய நகராட்சி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காரைக்குடி நகராட்சியில் பொறியாளராக பணியாற்றுபவர் கோவிந்தராஜ். கடந்த மே மாதத்தில் 19 நாட்களுக்கான சம்பளம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மீதம் 12 நாட்களுக்கு சம்பளம் வழங்க வில்லை என்று ஆணையர் அறையின் முன்பு அமர்ந்து நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். இதனால் அலுவலகத்துக்குள் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா நடவடிக்கையின்படி கோவிந்தராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிகிறது.

The post போராட்டம் நடத்திய நகராட்சி பொறியாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: