விபத்தில் கண்டக்டர் பலி

திருப்புத்தூர், ஜூன் 6: காளையார்கோவிலை சேர்ந்தவர் ராமு மகன் செந்தில்(43). இவர் காரைக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பணிக்காக காளையார்கோவிலிலிருந்து டூவீலரில் காரைக்குடிக்கு வந்துள்ளார். அப்போது தளக்காவூர் அருகே வரும்போது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் நிலை தடுமாறி தளக்காவூர் பஸ் ஸ்டாப் அருகே இருந்த வேப்பமரத்தில் மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த செந்தில் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார். இது பற்றி நாச்சியாபுரம் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post விபத்தில் கண்டக்டர் பலி appeared first on Dinakaran.

Related Stories: