கறம்பக்குடியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது

கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் அனுமதியின்றி மதுபானம் விற்பதாக கறம்பக்குடி காவல்நிலையத்திற்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து எஸ்ஐ ஜானகிராமன் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி அம்புக்கோவில் முக்கம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நரங்கியப்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (34) என்பவர் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் விரைந்து சென்று அவரை பிடித்து, அவரிடம் இருந்து 13 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கறம்பக்குடியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: