ஒரு பெண்ணுக்கு 2 பேர் போட்டி: தகாத உறவுக்கு ஆசைப்பட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு

 

புதுச்சேரி, ஜூன் 5: புதுச்சேரி, காந்திநகரை சேர்ந்தவர் கந்தவேல், இவருக்கும் முத்தரையர்பாளையம், கோவிந்தபேட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த பெண்ணுக்கும் சோலை நகர் பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் ஏற்கனவே பழக்கம் ஏற்பட்டு தகாத உறவு இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களுக்குள் உள்ள தகாத உறவு கந்தவேலுக்கு தெரியவரவே தனது கூட்டாளியுடன் சேர்ந்து மோகனை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் மோகன் பலத்த காயத்துடன் உயிர்தப்பினார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கந்தவேலுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மோகன் கோவிந்தப்பேட்டையில் உள்ள அந்த பெண் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் கந்தவேல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே கந்தவேல் என் வீட்டுக்கு எதுக்கு வந்தாய் எனக்கூறி மோகனிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மோகன் அருகில் இருந்த கத்தியை எடுத்து கந்தவேலுவை சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளார். பின்னர் இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தவுடன் மோகன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து கந்த
வேலுவை கதிர்காமம் அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து கந்தவேல் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி மோகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தார். ஒரு பெண்ணுக்கு இரண்டு வாலிபர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு கத்தியால் வெட்டிக்கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஒரு பெண்ணுக்கு 2 பேர் போட்டி: தகாத உறவுக்கு ஆசைப்பட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Related Stories: