கோயில் விழாவுக்கு வந்த தொழிலாளி திடீர் சாவு

களக்காடு: களக்காடு அருகேயுள்ள வீ.கே.நகரை சேர்ந்த மாரியப்பனின் மகன் மகேஷ் (36). கூலி தொழிலாளி. இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இதனிடையே தனது மனைவியின் ஊரான காடுவெட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்த மகேஷ், கடந்த 2ம்தேதி வீ.கே.நகரில் நடந்த மகேஷின் குடும்ப கோயில் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்றார். அங்கு நடந்த அன்னதானத்தில் பக்தர்களுக்கு உணவு பரிமாறிய அவர், வீட்டிற்கு வந்த சிறிதுநேரத்தில் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதறிய உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த களக்காடு எஸ்ஐ ரங்கசாமி மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

The post கோயில் விழாவுக்கு வந்த தொழிலாளி திடீர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: