வீட்டு தண்ணீர் தொட்டியில் தூக்குபோட்டு முதியவர் சாவு

பெரம்பூர்: சென்னை பெரம்பூர் மதுரைசாமி மடம் தெரு பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் (65). இவர் தனது மகன் ரமேஷ் உடன் வசித்து வந்தார். இவரது மனைவி சில மாதங்களுக்கு முன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில், சுதாகரன் சில மாதங்களாக கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

நேற்றிரவு வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் உள்ள இரும்பு ஏணியில் கயிறு கட்டி சுதாகரன் தூக்கு மாட்டி உயிருக்கு போராடினார். அவரை மீட்டு அவரது மகனுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்த அவர், தந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ‘’சுதாகரன் ஏற்கனவே இறந்துவிட்டார்’ என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

The post வீட்டு தண்ணீர் தொட்டியில் தூக்குபோட்டு முதியவர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: