ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

ஒடிசா : ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கோரமண்டல் ரயிலில் பயணித்த 8 பேரும் பாதுகாப்பாக உள்ளனர். கோவையைச் சேர்ந்த கோபி, சென்னையைச் சேர்ந்த ஜெகதீசன் பாதுகாப்பாக உள்ளனர். ரயிலில் சென்ற எஞ்சிய 6 பேர் பத்திரமாக உள்ளதாக சக பயணிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு உறவினர்கள் தேடி வருகின்றனர்.

The post ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: