கருணாநிதி பிறந்த நாள் விழா ஒத்திவைப்பு

தர்மபுரி, ஜூன் 4: ஒடிசாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ரயில் விபத்தில், 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்தை தொடர்ந்து, திமுக தலைமை கழகம் அறிவித்தபடி, தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா நடைபெறுவதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்படுகிறது. அந்தந்த பகுதியில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலாளர்கள், கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி கேட்டுக்கொண்டார். இதையடுத்து, தர்மபுரியில் திமுக சார்பில், நான்குரோடு, மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில், கருணாநிதி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

The post கருணாநிதி பிறந்த நாள் விழா ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: