சுரண்டையை சிறந்த நகராட்சியாக உயர்த்தி முதல்வரிடம் விருது வாங்குவதே லட்சியம்

சுரண்டை, ஜூன் 3: சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் கூறுகையில், ‘தென்காசி எம்எல்ஏ பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று திமுக ஆட்சிஅமைந்தவுடன் சுரண்டையை நகராட்சியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தரம் உயர்த்தி அறிவித்ததார். சுரண்டையின் முதல் தலைவராக பொறுப்பேற்கும் வாய்ப்பையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினர். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சுரண்டை நகராட்சியில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகம், சுத்தம், சுகாதாரத்தில் முதன்மையான நகராட்சியாக சுரண்டையை மாற்றி முதல்வரின் கையால் விருது வாங்குவதே லட்சியம். தென்காசி எம்எல்ஏ பழனி நாடார், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரின் ஒத்துழைப்புடன் சுரண்டைக்கு பாதாள சாக்கடை திட்டம், சுற்றுச்சாலை, புதிய குடிநீர் திட்டம் ஆகியவற்றை பெற்று சுரண்டை மக்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்ய கடுமையாக முயற்சி செய்வேன். சுரண்டையில் திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட காமராஜர் அரசு கலைக் கல்லூரிக்கு கூடுதல் கட்டிடம் மற்றும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் முதல்வரிடம் கோரிக்கை வைத்து முயற்சி செய்வேன்’ என்றார்.

The post சுரண்டையை சிறந்த நகராட்சியாக உயர்த்தி முதல்வரிடம் விருது வாங்குவதே லட்சியம் appeared first on Dinakaran.

Related Stories: