வேதாரண்யம் அருகே 8ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் தொழிலாளி போக்சோவில் கைது

வேதாரண்யம், ஜூன்2: வேதாரண்யம் அருகே 8ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (34). விவசாய கூலித் தொழிலாளியான இவர், அதே ஊரை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை தனது வீட்டு பாத்ரூமில் தண்ணீர் வருகிறதா என்று பார்க்குமாறு அழைத்திருக்கிறார். சிறுமி உள்ளே சென்றபோது பின் தொடர்ந்த சேகர் சிறுமியின் கையை பிடித்து வாயை பொத்தியிருக்கிறார். இதில் அவரிடமிருந்து தப்பி சிறுமி தப்பி வந்து தனது தாயிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் பசுவதி வழக்கு பதிவு செய்து சேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

The post வேதாரண்யம் அருகே 8ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் தொழிலாளி போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: