பாம்பு கடித்து தொழிலாளி பலி

தேவாரம், ஜூன் 2: தேவாரம் அருகே உள்ள மல்லிங்காபுரம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் காளிராஜ் (45). கூலி தொழிலாளி. இவர் மல்லிகாபுரம் மேற்கே உள்ள ஜெயச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் வேலை செய்து வந்தார். அப்போது, திடீரென பாம்பு ஒன்று காலில் கடித்தது. உடனடியாக உத்தமபாளையம் அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டு, உயர் சிகிச்சைக்காக, தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காளிராஜ், இறந்தார். இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post பாம்பு கடித்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: