பொறுப்பேற்பு

சிவகிரி, ஜூன் 2: சிவகிரி பேரூராட்சி நிர்வாக அலுவலர் நவநீதகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பேரூராட்சிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து விருதுநகர் மாவட்டம் சேத்தூர் பேரூராட்சி நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த வெங்கடகோபு சிவகிரி பேரூராட்சி நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சிவகிரிக்கு வருகைதந்த அவர், புதிய பேரூராட்சி நிர்வாக அலுவலராகப் பொறுப்பேற்றார். அவருக்கு பேரூராட்சி தலைவர், கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

The post பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: