தூத்துக்குடியில் தேங்கி கிடக்கும் நீரில் செத்து மிதக்கும் மீன்கள்

தூத்துக்குடி, ஜூன் 1:தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் உள்ள குட்டையில் ஏராளமான மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி கதிர்வேல் நகர்- கோக்கூர் இடையே உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த ஆண்டுகளில் பெய்த கனமழையில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. குளம்போன்ற இந்த தண்ணீரில் ஏராளமான மீன்கள் உள்ளன. மேலும் இந்த குட்டையில் தேங்கி நிற்கும் இந்த தண்ணீரில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் சேர்ந்து மாசடைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் இந்த குட்டையில் இருந்த ஏராளமான மீன்கள் நேற்று திடீரென செத்து மிதந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிவருகிறது. அந்த குட்டைக்கு அருகே அங்கன்வாடி மையம் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மீன்கள் செத்து தூர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். குட்டையில் செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அகற்றிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தூத்துக்குடியில் தேங்கி கிடக்கும் நீரில் செத்து மிதக்கும் மீன்கள் appeared first on Dinakaran.

Related Stories: