கார் விபத்தில் இளம்பெண் பலி

 

திருமங்கலம், மே 31: விருதுநகர் மாவட்டம் துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(32). இவரது தங்கை சந்தியா(22). இவரது தோழி நெல்லை டவுனை சேர்ந்த புவனா(22).மூவரும் காரில் கள்ளிக்குடியை அடுத்துள்ள விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள நல்லமநாயக்கன்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற வாகனத்தினை முந்த சந்தோஷ்குமார் முயலும் போது குறுக்கில் டூவீலர் வரவே அதன் மீது மோதாமல் இருக்க காரினை சாலையின் இடதுபுறம் திருப்பியுள்ளார். அப்போது சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் புவனா உயிரிழந்தார். சந்தோஷ்குமாரும் அவரது தங்கை சந்தியாவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post கார் விபத்தில் இளம்பெண் பலி appeared first on Dinakaran.

Related Stories: