மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

 

சிங்கம்புணரி, மே 31: சிங்கம்புணரி அருகே மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலியானார். சிங்கம்புணரி அருகே எஸ் புதூர் ஒன்றியம் மேல வண்ணாயிரத்து பகுதியை சேர்ந்தவர் அடைக்கண் மகன் கணேசன்(38). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். நேற்று கணேசன் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். கிணற்றின் அருகே இருந்த மின் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த புழுதிபட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: