வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கம்பம், மே 30: கம்பம் காமயகவுண்டன்பட்டி சாலை தெருவைச் சேர்ந்தவர் அருண் ஜேசுதா (28). இவரது தந்தை ஜேம்ஸ் பிரபு, தாயார் ஆரோக்கிய ராணி ஆகிய 2 பேரும் இறந்துவிட்டனர். அதன் பிறகு அவரது உறவினரான உமாராணி என்பவரது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த நாலு வருடங்களுக்கு முன்பு சட்டக் கல்லூரியில் சேர்ந்த அருண் ஜேசுதா படிப்பு வரவில்லை எனக் கூறி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இவர் கடந்த 17ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து உமாராணி கம்பம் வடக்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண் ஜேசுதாவை தேடி வந்தனர்.

இதற்கு இடையில் நேற்று முன்தினம் மாலை செல்போன் டவர் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கம்பம் வடக்கு போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐ இளையராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அருண்ஜேசுதா அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அருண் சேசுதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: