இந்நிலையில் பணி நிமித்தமாக கொடைக்கானல் சென்று விட்டு நேற்று மதியம் மனோஜ்குமார் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. இதனால் மனைவியை அழைத்தார். ஆனால் அவர் வீட்டிலிருந்து ெவளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வந்து வீட்டின் சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து வீட்டு ஜன்னலில் எட்டி பார்த்தனர். அப்போது 2 குழந்கைள் மற்றும் ஷோபனா ஆகியோர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்ததும் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய தாய், 2 குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து 2 குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதற்கு என்ன காரணம், கணவர் மனநிலை பாதிக்கப்பட்ட விரக்தியில் இறந்தாரா, கடன் தொல்லையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.
The post 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை appeared first on Dinakaran.