செயற்பொறியாளர்கள் விளக்கம் அளிப்பு குருவிக்கரம்பை கிளை நூலகத்தில் மாணவர்களுக்கான கோடைகால கொண்டாட்ட விழா

பேராவூரணி, மே 27: பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை கிளை நூலகத்தில் மாணவர்களுக்கான கோடைகால கொண்டாட்ட விழா நடைபெற்றது. விழாவிற்கு ஓய்வுபெற்ற தமிழாசிரியர் கருப்பையன் தலைமை வகித்தார். வாசகர் வட்டம் சார்பில் பார்த்திபன் வரவேற்றார். தமிழாசிரியர் முருகையன் தான் எழுதிய, ‘தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தென்னிந்தியர் பண்பாடு’ என்ற நூலை, நூலகத்திற்கு வழங்கி, புரவலராக இணைந்து கொண்டார். கோடை விடுமுறை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நூலகம் சார்பில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மெஞ்ஞானமூர்த்தி பரிசுகளை வழங்கி பேசினார் . விழாவில் திவ்யா, சுரேஷ், செந்தில்குமார், உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம், அஞ்சல் துறை மகேஸ்வரி மற்றும் வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக குருவிக்கரம்பை கிளை நூலகர் நீலவேணி நன்றி கூறினார்.

The post செயற்பொறியாளர்கள் விளக்கம் அளிப்பு குருவிக்கரம்பை கிளை நூலகத்தில் மாணவர்களுக்கான கோடைகால கொண்டாட்ட விழா appeared first on Dinakaran.

Related Stories: