கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் உயிரை பறிக்க காத்திருக்கும் டேஞ்சர் ஸ்விட்ச் பாக்ஸ்

கந்தர்வகோட்டை, மே 27: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள உயர் மின் கோபுர மின் விளக்கு ஸ்விட்ச் பாக்ஸ் பாதுகாப்பற்ற முறையில் உள்ளதை உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். இந்த பேருந்து நிலையத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான பெரியவர்கள், பெண்கள், முதியோர், சிறுவர்கள் வந்து செல்லும் சூழ்நிலையில் தாழ்வாக உள்ள ஸ்விட்ச் பாக்சை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் தாழ்வான பகுதியில் ஸ்விட்ச் பாக்ஸ் இருப்பதால் சிறுவர், சிறுமிகள் தவறுதலாக தொட்டால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முறையான ஆட்களை கொண்டு மின் விளக்குகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கூறி உள்ளனர்.

The post கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் உயிரை பறிக்க காத்திருக்கும் டேஞ்சர் ஸ்விட்ச் பாக்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: