வீட்டு சுவரை இடித்த சகோதரர்கள்

சிவகாசி, மே 27: சிவகாசி தங்கப்பா நகரை சேர்ந்தவர் பாலாஜி(43). இவர் தெற்கு ரத வீதியில் உள்ள கட்டிடத்தை விலைக்கு வாங்கி அதனை மாற்றி அமைப்பதற்காக வேலை செய்து வருகிறார். வீட்டின் அருகே குடியிருந்து வரும் முத்துக்குமார், அவரது சகோதரர் சவுந்தர்ராஜ் ஆகியோர் பணி செய்ய விடாமல் இடையூறு செய்து வந்தனர். இந்நிலையில் பாலாஜியின் வீட்டு சுவரை இடித்து சகோதரர்கள் இருவரும் சேதப்படுத்தினர். இதனை தடுத்த பாலாஜியை தகாத வார்த்தை பேசி, அப்படித்தான் இடிப்போம் என பிரச்னை செய்தனர். இது குறித்து சிவகாசி டவுன் போலீசில் பாலாஜி புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

The post வீட்டு சுவரை இடித்த சகோதரர்கள் appeared first on Dinakaran.

Related Stories: