விசாரணை காலத்தில் 3 பேர் உயிரிழந்தனர். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் மீதமுள்ள 11 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த 2019ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து 6 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பூந்தமல்லி நீதிமன்றம் அளித்த 10 ஆண்டுகள் சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்தார். காவல்துறையினரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல் நிலையத்தை தாக்கவில்லை என்றாலும் கூட, துப்பாக்கி உள்ளிட்ட அரசு சொத்துகளை கொள்ளை அடித்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
The post அரியலூர் ஆண்டிமடம் காவல் நிலையம் சூறையாடல் வழக்கு 6 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைப்பு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.