5 ஆண்டுக்கு ஒரு முறை விதை விற்பனை உரிமங்கள் புதுப்பிக்க வேண்டும்

கறம்பக்குடி, மே 26: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வேளாண் வட்டாரத்தில் விதைகள் விற்பனை செய்யும் உரிமையாளர்கள் தங்கள் உரிமங்களை, குறிப்பாக அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை கோட்டம் கறம்பக்குடி வேளாண் வட்டாரத்தில் நெல் உளுந்து நிலக்கடலை காய்கறி நாற்றுகள் மற்றும் பல செடிகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் இவற்றை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்பவர்கள் கட்டாயம் விதை விற்பனை உரிமம் பெற்று விற்பனை மேற்கொள்ள வேண்டும். இதுவரை அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலமாக விண்ணப்பித்த விற்பனையாளர்கள் அனைவருக்கும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983ன் கீழ் 5 ஆண்டுகளுக்கு விற்பனை மேற்கொள்ள புதிய விதை விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.

விதை கொள்முதல் தென்னங்கன்றுகள் மற்றும் நாற்றுகள் விபரங்களை விதை இருப்பு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு நாற்றுகள் விற்பனை செய்யும்போது பயிர், ரகம், நாற்றங்கால் எண்ணிக்கை, விற்பனை விதை ஆகிய விவரங்களுடன் விவசாயிகளின் கொயொப்பாத்துடன் ரசீது வழங்க வேண்டும். உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி விற்பனை செய்யும் போது அவற்றின் ரகம் விலை குறிப்பிட்டு ரசீது வழங்கி இருப்பு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும், விதை விற்பனை நிலையம் முன்பு நிலையத்தின் பெயர் பலகையும் விதை இருப்பு மற்றும் விதை பட்டியல் அடங்கிய இருப்பு பலகை முழு விவரங்களுடன் வைக்க வேண்டும், விதை சட்ட விதிகளை பின் பற்றாமல் விதிகளை மீறி விற்பனை செய்யும் விதை விற்பனை யாளர்கள் மீது விதை சட்ட விதிகள் 1966 மற்றும் விதை விதிகள் 1968ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

என்றும் தரமான விதிகள் தென்னங்கன்றுகள் மற்றும் நாற்றுகளை விவசாயிகளுக்கு விற்பனை மேற்கொள்ள புதிய லைசன்ஸ் பெற தஞ்சாவூர் காட்டு தோட்டத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த விதை வளாகத்தில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் சமர்ப்பித்து விதை கட்டுப்பாட்டு ஆணை 1983 இன் கீழ் புதிய லைசன்ஸ் பெற்று கொள்ளலாம். தொடர்ந்து தங்களின் விதை விற்பனை உரிமத்தை உரிமம் வழங்கப்பட்ட தேதியில் இருந்து 5 ஆண்டுகள் முடியும் தேதி கால கெடுவுக்குள் புதுப்பித்து தொகையாக ரூ.500 மட்டும் செலுத்தி அடுத்த 5 ஆண்டுகளுக்கு விதை விற்பனை உரிமைத்தினை புதுப்பித்து விதை சட்ட விதிகளை பின்பற்றி விற்பனை யாளர்கள் தரமான விதை விநியோகம் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் விநாயக மூர்த்தி கறம்பக்குடி வட்டாரத்தில் உள்ள விதை விற்பனையாளர்களுக்கு தமது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post 5 ஆண்டுக்கு ஒரு முறை விதை விற்பனை உரிமங்கள் புதுப்பிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: