சந்திரசேகரபுரம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி மன்னார்குடி அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மன்னார்குடி, மே 25: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி விழல்காரத் தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மூன்று தினங்கள் அங்காளம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை அந்தணர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கொண்ட கடங்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.பின்னர், விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடை பெற்றது. தொடர்ந்து தீபாராதனை செய்யப்பட்டு, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர், அங்காளம்மனுக்கு புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கோயிலில் விசேஷ தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது. இரவு வானவேடிக்கை முழங்க சுவாமி வீதி உலா நடந்தது.

The post சந்திரசேகரபுரம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி மன்னார்குடி அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: